மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், இப்போது பாலிவுட்டில் பரபரப்பு நடிகையாகி விட்டார். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும், துணிச்சலாக நடித்து வரும் அவரை மீண்டும் கோலிவுட்டுக்கு அழைத்து வரும் முயற்சிகளும் திரைக்குப்பின்னால் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ருதக்கும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மறுபடியும் வரும் ஆசையும் மனதளவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், இந்த நேரத்தில், அவரைத்தேடிச்செல்லும் சில மெகா படங்களை அவரது மேனேஜர் ஒருவர், ஸ்ருதிக்கு தெரியாமலேயே அந்த வாய்ப்புகளை வேறு நடிகைகளுக்கு திருப்பி விட்டு வந்தாராம். ஆர்யாவுடன் மீகாமன் படத்தில் நடிக்க ஸ்ருதியை கேட்டபோதுகூட, அவர் இந்தியில் பிசி என்று சொல்லி வேறு ஒரு நடிகைக்குத்தான் அவர் சிபாரிசு செய்தாராம். ஆனால், அதற்கு ஆர்யா மசியவில்லை. அதனால் டாப்சியை கூட்டு சேர்த்து விட்டார்.
இந்த நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு ஸ்ருதி ஒப்பந்தமான பிறகுதான், இது மேனேஜர் செய்த கோல்மால் என்பது ஆர்யாவுக்கே தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து, உடனடியாக அந்த மேனேஜரை நீக்கி விட்ட ஸ்ருதிஹாசன், இனி பட விசயமாக தானே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.