‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்து கேளடி கண்மணி மூலம் டைரக்டர் ஆனவர் வசந்த். ஆசை படத்தின் மூலம் அஜீத்திற்கு வாழ்க்கை கொடுத்தவர், பூவெல்லா கேட்டுப்பாரில் ஜோதிகாவை அறிமுகப்படுத்தியவர், நேருக்கு நேரில் சூர்யாவை அறிமுகப்படுத்தியவர், நீபாதி, நான் பாதி, அப்பு, ரிதம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே. சத்தம் போடாதே, மூன்று பேர் மூன்று காதல் படங்களை இயக்கியவர். இதுவரை அவர் இயக்கிய படங்களில் ஒரு காட்சியில்கூட அவர் நடித்ததில்லை. தற்போது ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் டைரக்ட் செய்யும் வை ராஜா வை படத்தில் ஹீரோ கொளதம் கார்த்திக்கிற்கு அப்பாவாக நடிக்கிறார்.
"நடிக்கணும்ற ஆசை எனக்கு எப்பவுமே இருந்ததில்லை. நான் நடிக்கிற மாதிரியான சில கேரக்டர்கள் என் படத்துல வந்தப்பவும் அதுக்கு நான் வேற ஆளைத்தான் போட்டேன். ஐஸ்வர்யா வந்து கதை சொல்லி நீங்கதான் நடிக்கணும்னு கேட்டப்போ அந்த அன்பு கட்டளையை என்னால மீற முடியல. ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமேன்னு ஒத்துக்கிட்டேன். அப்பாவுக்கும், மகனுக்குமான உறவின் மென்மையான உணர்வுகளை பிரதிபலிக்கும் கேரக்டர். தொடர்ந்து நடிப்பேனா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். ஒரு நாளும் இயக்குனர் என்பதில் இருந்து மாற மாட்டேன்" என்கிறார் வசந்த்.