ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? | சாணம் அள்ளிய கையில் தேசிய விருது: 'இட்லி கடை' அனுபவம் பகிர்ந்த நித்யா மேனன் | இப்ப, முருகன் சீசன் நடக்குது: இயக்குனர் வி.சேகர் | நடிகர் கார்த்தி கொடுத்த விருந்து: 'ஐ லவ் யூ' சொல்லி நெகிழ்ச்சி | சென்ட்ரல் பட விழாவில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நினைவுகள் | தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது | மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் | என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா |
இந்திய அளவில் சினிமா இசை என்பது இப்போது அதிக வருவாய் தரும் ஒரு துறையாக மாறிவிட்டது. யு டியூப், இசை இணைய தளங்கள், மொபைல் நெட்வொர்க் உள்ளிட்ட பல தளங்களின் மூலம் சினிமா பாடல்களுக்கான வருவாய் கிடைத்து வருகிறது. அதனால், தங்களது படங்களில் அதிரடியான, உடனடியாக ஹிட் ஆகக் கூடிய பாடல்களை உருவாக்குவதில் இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோருக்கு அதிக நெருக்கடி உள்ளது. இதன் காரணமாக இசையமைப்பாளர்களின் சம்பளம் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் அனிருத் நம்பர் 1 இடத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவருடைய சம்பளம் 15 கோடி என்கிறார்கள். அவர் இசையமைக்கும் படங்களின் உரிமையும் அந்த விலையை விடவும் அதிகம் போவதால் அந்த சம்பளத்தைக் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம். அவருக்குப் பிறகு தேவி ஸ்ரீ பிரசாத், தமன் உள்ளிட்டவர்கள் 10 கோடிக்கும் அதிகமாக வாங்குகிறார்களாம்.
அனிருத் இந்திய அளவில் பிரபலமாக உள்ளதால் அவருக்கு தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. ரஜினிகாந்த், ஷாரூக்கான் படங்களுக்கு இசையமைத்தும் அவருடைய ஸ்டார் அந்தஸ்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.