‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபகாலமாக தனது இசையில் உருவாகும் படங்களில் அவ்வப்போது பின்னணி பாடி வரும் யுவன்ஷங்கர்ராஜா, இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். இதனால் இசையமைப்பதைப்போலவே அவருக்கு பின்னணி பாடுவதில் ஆர்வம் இருப்பதை அறிந்த ஏ.ஆர்.ரகுமான், மரியான் படத்துக்காக யுவனை ஒரு பாடல் பாட வைத்தார். அந்த பாடல் ஹிட்டாகி விட்டதால், இப்போது வேறு சில இசையமைப்பாளர்களும் யுவனை பாட அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில், நீதானே என் பொன் வசந்தம் படத்தையடுத்து தான் இசையமைக்கும் மேகா படத்தில், மகன் யுவனை ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா... என்று தொடங்கும் அந்த மெலோடியை பின்னணி பாடகி ரம்யாவுடன் இணைந்து பாடியுள்ளார் யுவன். அவரது குரலில் அப்பாடல் யூத் விரும்பும் வகையில் வந்திருப்பதால், இளையராஜாவும், அப்படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.