‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபுதேவா இயக்கும், இந்தி படத்தில், சிங்கள நடிகை நடிப்பதற்கு, இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரபுதேவா, இந்தியில் இயக்கி வரும், "ராமைய்யா வஸ்தாவையா என்ற படத்தில், இலங்கை நடிகை ஜாகுலின் பெர்னாண்டஸ் சில காட்சிகளில் நடிக்கவும், ஒரு பாடலுக்கு ஆடவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபுதேவா இயக்கும் படத்தில், சிங்கள நடிகையை நடிக்க வைப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழர்களை படுகொலை செய்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட, இலங்கை அரசின் மீது, போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உலக நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுகொன்றுள்ளனர். இதே போன்ற பாலகனான, தன் மகனை இழந்த, பிரபு தேவாவுக்கு, இந்த வலி நிச்சயம் தெரிந்திருக்கும். இந்நிலையில், இலங்கையிலிருந்து நடிகையை அழைத்து வந்து, தன் படத்தில், பிரபுதேவா நடிக்க வைப்பது மன்னிக்க முடியாதது. இலங்கை நடிகையை படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு அதில், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.