Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி

19 ஏப், 2024 - 16:22 IST
எழுத்தின் அளவு:
Suri-returned-in-agony-as-she-could-not-drive

'விடுதலை' படத்தின் கதையின் நாயகனான சூரி, லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். சூரியும், அவரது மனைவியும் ஓட்டளிப்பதற்காக மையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு வாக்காளர் பட்டியலில் சூரியின் பெயர் இடம் பெறாமல் விடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதன் காரணமாக சூரி ஓட்டளிக்க முடியவில்லை. அவரது மனைவி மட்டுமே ஓட்டளித்தார்.

அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூரி, “என் ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்தேன். கடந்த எல்லா தேர்தல்லயும் என்னுடைய உரிமையை கரெக்டா செஞ்சிருக்கேன். ஆனா, இந்த தடவை இந்த பூத்துல என்னோட பேரு விடுபட்டு போச்சின்னு சொல்றாங்க. மனைவி ஓட்டு மட்டும் இருக்கு. இருந்தாலும் 100 சதவீதம் ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கலன்னும் போது ரொம்ப வேதனையா இருக்கு, மனசு கஷ்டமா இருக்கு. எங்க யாருடைய தவறு, எப்படி நடந்ததுன்னு தெரியலை. இருந்தாலும் ஓட்டு போட்டுட்டு, ஓட்டு போடுங்கன்னு சொல்றத விட, ஓட்டு போட முடியலையேன்ற வேதனையோட நான் சொல்றேன். எல்லாரும் தயவு செஞ்சு 100 சதவீதம் ஓட்டு போடுங்க. ரொம்ப முக்கியம், நாட்டுக்கு நல்லது. எல்லாரும் தவறாம உங்க வாக்கை செலுத்துங்க. நானும் அடுத்த தேர்தல்ல கண்டிப்பா என் வாக்கை செலுத்துவன்னு நம்பறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள்ஹிந்தி உரிமையில் சாதிக்கும் ... விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

M Ramachandran - Chennai,இந்தியா
20 ஏப், 2024 - 14:45 Report Abuse
M  Ramachandran ஐயோ பாவம் இவர் விஷாலுடன் நடிப்பதினால் வந்த வினை. இது ஒரு சாம்பில் தான். இனி இருக்கு கச்சேரி
Rate this:
ponssasi - chennai,இந்தியா
20 ஏப், 2024 - 13:50 Report Abuse
ponssasi வேதனை என்னான்னா? கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர், உஷாரான அரசு சென்னையின் பிற பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்துகளை நிறுத்தியது. என்னால் கிளாம்பாக்கம் செல்லவே முடியவில்லை.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
19 ஏப், 2024 - 21:52 Report Abuse
Mani . V உன் பேர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்று கூட தேர்தலுக்கு முன்னமே சரி பார்க்க முடியாத, நீதான் ஜனநாயகக் கடமையை ஆற்றி, நாட்டைக் காப்பாற்றப் போகிறாயாக்கும். எல்லாம் இந்த மீடியாக்கள் கொடுக்கும் முன்னுரிமை. கேரளா போன்று நடிகர்கள் வாக்கு செலுத்த வரும்பொழுது எந்த மீடியாவும் கண்டு கொள்ளாமல் இருப்பது மாதிரி என்றைக்கு தமிழக மீடியாக்கள் திருந்தும் என்று தெரியவில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in