ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் சினிமா எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆரம்ப கட்டத்தில் தவித்து வருகிறது. இந்த வருடத்தின் மூன்றாவது வாரம் முடிய இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. ஆனாலும், இதுவரையில் லாபகரமான வெற்றி என எந்த ஒரு படத்தையும் சொல்ல முடியவில்லை.
நேற்று கூட ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'ரெபல்' படம் வெளிவந்தது. அப்படத்திற்கும் கூட ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு தரவில்லை. நேற்றுமுன்தினம் தான் இந்த ஆண்டிற்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகின. முதல் போட்டியே சென்னையில் நடந்தது. அதுவும் சென்னை அணிக்கும், பெங்களூரு அணிக்குமான போட்டி. அதனால், நேற்றுமுன்தினம் மாலையிலிருந்தே தமிழக கிரிக்கெட் ரசிகர்களை ஜுரம் பற்றிக் கொண்டது.
ஏற்கெனவே முழு ஆண்டுத் தேர்வுகளாலும் தியேட்டர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இப்போது பிரீமியர் லீக் போட்டியும், சில தினங்களுக்கு முன்பாகவே தேர்தல் பிரச்சாரமும் ஆரம்பமாகிவிட்டது. அதனால், தியேட்டர்களில் கூட்டம் மேலும் குறைய ஆரம்பித்துள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்றாலும் பத்து சதவீதம் கூட தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்படவில்லை.
கிரிக்கெட், தேர்தல் முடிந்த பின்புதான் மக்கள் சினிமா பக்கம் திரும்புவார்கள். அதுவரையில் தள்ளாட்டம், திண்டாட்டம்தான் இருக்கும்.