ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
நடிகர் ரோபோ சங்கர் திரைப்பட சூட்டிங்கிற்காக ஊட்டி சென்றுள்ளார். அங்கே சூட்டிங் ஸ்பாட்டில் தான் படும் கஷ்டங்களை வீடியோவாக வெளியிட்டுள்ள ரோபோ சங்கர், 'ஊட்டில காலையில 6 மணிக்கு சூட்டிங் கூப்பிடுறார் ஆடம்ஸ். நான் இங்க ஊசி போட்டு வந்து உட்கார்ந்து இருக்கேன். இங்க என்னடனா காலையில் 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை சூட்டிங் எடுக்கனுமாம். படத்தோட டைட்டில கேட்டாலும் சொல்ல மாட்றான். சாப்பாட்ட வாயில வைக்கும் போது தான் கூப்பிடுறான். ஏன் தான் இப்படி பாடா படுத்துறானோ?. ஆடம்ஸ் தானே படம் எடுக்கிறான். தம்பி ஆசைப்பட்டு கூப்பிட்டான்னு வந்துட்டேன். டைத்துக்கு சோறுபோட்டு படுக்க வைக்க வேண்டாமா இந்த பனியில' என்று அந்த வீடியோவில் தனது ஸ்டைலில் காமெடியாக புலம்பியிருக்கிறார். அந்த வீடியோவானது வைரலானது. காமெடிக்காக இந்த வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் ரோபோ சங்கர்.