ஓராண்டாக நடந்த 'அமரன்' படப்பிடிப்பு நிறைவு : விரைவில் ரிலீஸ் அறிவிப்பு | இன்றும் டிரெண்ட்டில் நாட்டாமை ‛மிக்சர்' மாமா : யார் இவர்... - கேஎஸ் ரவிக்குமார் உடைத்த ரகசியம் | 27 ஆண்டுகளுக்கு பிறகு கஜோலுடன் இணையும் பிரபுதேவா | நேற்று 'மெய்யழகன்', இன்று 'வா வாத்தியார்' - கார்த்தி படங்களின் அப்டேட் | அமரன் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்த சிவகார்த்திகேயன் | மீண்டும் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா | சிரஞ்சீவி படத்தில் இத்தனை இளம் நடிகைகளா? | தள்ளிப்போகும் தனி ஒருவன் 2? | ஜூலை மாதத்தில் துவங்கும் கலகலப்பு 3 படப்பிடிப்பு | தந்தையின் நண்பர்கள் புகைப்படம் பகிர்ந்து மம்முட்டி படத்திற்கு வாழ்த்து கூறிய சிபிராஜ் |
பிளஸ்ஸி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலா பால் மற்றும் பலர் நடித்துள்ள மலையாளப் படம் ‛தி கோட் லைப் - ஆடுஜீவிதம்'. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக மார்ச் 28ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் கதை, பரத்பாலா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், தனுஷ், பார்வதி மற்றும் பலர் நடிப்பில் 2013ல் வெளிவந்த 'மரியான்' படம் போல இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பேசுகையில், “ஒருத்தர் கேட்டாரு, என்ன 'மரியான்' மாதிரி இருக்குமான்னு கேட்டாரு. 'மரியான்' ஒரு கற்பனைக் கதை, ஆனால், இது ஒரு நிஜக் கதை. 250 முறை அந்த நாவல் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அவ்வளவு முறை நடந்திருக்குன்னா, அந்த நாவல்ல ஏதோ ஒண்ணு நிச்சயம் இருந்திருக்கணும். அதை நீங்களே கண்டுபிடிச்சி சொல்லுங்க,” என்றார்.
'ஆடுஜீவிதம்' படம் 'கோட் டேஸ்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ஒரு படம். பென்யமின் என்பவர் எழுதிய இந்த நாவல் 2008ல் வெளிவந்து, மலையாளத்தில் அதிகம் விற்பனையான ஒரு நாவல். கேரளாவிலிருந்து சவூதி அரேபியா சென்ற ஒரு மலையாளத் தொழிலாளி, அவருக்கு விருப்பமில்லாத ஆடு மேய்க்கும் வேலையில் தள்ளப்படுகிறார். அது பற்றிய நாவல்தான் 'கோட் டேஸ்'.
'மரியான்' படம் போல 'ஆடுஜீவிதம்' இருக்கிறதா, அல்லது 'மரியான்' படத்தின் கதையும் 'கோட் டேஸ்' நாவலில் இருந்து தழுவி எடுக்கப்பட்டதா என்பது 'ஆடுஜீவிதம்' வந்த பின் தெரியும்.