ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரு வார கால தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி, இன்று (திங்கள்கிழமை) முதல் போல்பச்சன் என்ற தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அதையடுத்து பலுப்பு என்ற தெலுங்கு படத்திலும் பேட்ச் ஒர்க்கை முடித்துக்கொடுப்பதாக ஒத்துக்கொண்டுள்ளார் அஞ்சலி. இதையடுத்து பதறிப்போயிருந்த ஆந்திர படாதிபதிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
மேலும், தன்னால் ஏற்பட்ட படப்பிடிப்பு இடையூறுகளுக்கு வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்து அஞ்சலி பேசிய வீடியோக்கள் இணையதளங்கள் மற்றும் தெலுங்கு சேனல்களில் வெளியாகி வருவதால், அனைவருக்கும் அஞ்சலி மீதான அதிருப்தி விலகி வருகிறதாம். இந்நிலையில் தனது பெயருக்கு ஏற்பட்ட களஙகத்தை மாற்ற, மேலும் சில முக்கிய சினிமா புள்ளிகளுக்கும் போன் போட்டு மன்னிப்பு கோரி வருகிறாராம் அஞ்சலி.
என்றாலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சலி புகார் அளித்திருந்ததால், ஐதராபாத்தில் அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளார்களாம்.