பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் | போதை பார்ட்டியில் கலந்து கொண்டேனா? : நடிகர் ஸ்ரீகாந்த் விளக்கம் | சம்பளம் கேட்டால் மிரட்டுகிறார் : தயாரிப்பாளர் மீது நடிகை பாயல் புகார் | கல்கி 2898 ஏடி, இந்தியன் 2 - அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டங்கள் ரிலீஸ் | நட்பா, துரோகமா ? - அழுத்தமாக மிரட்டும் 'கருடன்' டிரைலர் | முதன் முறையாக தேர்தலில் ஓட்டளித்த அக்ஷய்குமார் | சின்னத்திரைக்கு வந்தார் வடிவேலு | கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் நடிகரின் படம் |
சமீபத்தில் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது. கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நண்பர்கள் குழுவில் ஒருவர், அங்கே உள்ள குணா குகைக்குள் தவறி விழுந்துவிட அவரை மற்ற நண்பர்கள் காப்பாற்ற போராடுவது தான் கதை. கேரளா, தமிழகம் என இரண்டு பகுதிகளையும் சார்ந்து இந்த கதை உருவாகியிருந்ததால் மலையாளத்தையும் தாண்டி தமிழிலும் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது தமிழக திரையரங்குகளில் அதிக எண்ணிக்கையில் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது.
இங்கே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இந்த படத்தை புகழ்ந்து பாராட்டிய வேளையில் பிரபல எழுத்தாளரும் ஷங்கர், மணிரத்னம், பாலா ஆகியோரின் படங்களில் ஆஸ்தான கதாசிரியராக பணியாற்றி வருபவருமான ஜெயமோகன், இந்த மஞ்சும்மேல் பாய்ஸ் படம் குறித்து கூறும்போது 'கேரள பொறுக்கிகள்' என்கிற வார்த்தையை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். இது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு நல்ல படைப்பை இந்த அளவிற்கு கடுமையாக விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன என்று பலரும் ஜெயமோகனின் கருத்துக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
ஜெயமோகனின் இந்த கருத்து குறித்து பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “ஜெயமோகன் இந்தப் படத்தின் மையக்கருத்தான நட்பு என்பதை பற்றி பார்க்கவே இல்லை. ஒரு பாட்டில் ஆல்கஹாலுக்குள் இந்த படத்தின் நல்ல கதையை அவர் அடைக்க முயற்சித்து இருக்கிறார். அது சரியானது அல்ல. ஜெயமோகன் இந்த படத்தை விமர்சித்திருப்பதன் உள்நோக்கம் என்ன என்கிற கேள்வி எனக்கும் எழுகிறது” என்று கூறியுள்ளார்.