விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
என்னதான் ஆச்சு, தமிழ் சினிமாவுக்கு… எனக் கேட்க வைத்துவிட்டார்கள். பொங்கலுக்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக சிறிய படங்கள் மட்டுமே அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பிடும்படியான ஹீரோக்களான தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சந்தானம் ஆகியோர் நடித்த படங்கள் கூட அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடவில்லை.
இந்த வருடம் ஆரம்பித்து 75 நாட்கள் ஆக உள்ள நிலையில் குறிப்பிடும்படியான வெற்றி அல்லது வசூல் என்பதே இல்லாமல் இருக்கிறது. இன்னும் 75 நாட்களுக்கும் அப்படியான படங்களும் வராத சூழ்நிலைதான் உள்ளது. தேர்வுகள், ஐபிஎல் போட்டிகள், தேர்தல் என அதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன.
இந்த இடைவெளியில் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த வாரமும் அது போன்ற படங்கள்தான் வர உள்ளது. சமுத்திரக்கனி, யோகிபாபு நடித்துள்ள 'யாவரும் வல்லவரே', ஆர்கே சுரேஷ் நடித்துள்ள 'காடுவெட்டி', மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள 'அமிகோ காரேஜ்', அனிஷ், முத்துப்ரியன், மனிஷாஜித் நடித்துள்ள 'ஆராய்ச்சி' ஆகிய படங்கள் மார்ச் 15ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றோடு மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' படம் தமிழில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இந்தப் படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ள படம். ஏற்கெனவே மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தமிழகத்தில் பெரும் வரவேற்பில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.