சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடித்து வரும் படம் 'வேட்டையன்'. 'ஜெய் பீம்' படத்தை இயக்கி த.செ.ஞானவேல் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளில் 3ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இதில் கலந்து கொள்ள நேற்று விமானத்தில் ஐதராபாத் சென்றார் ரஜினி. அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். ரஜினியுடன் புகைப்படம் எடுக்க விரும்பினர். ரஜினியும் அவர்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். சமீபகாலமாக ரஜினியிடம் பல மாற்றங்கள் தெரிகிறது சசிகலா வீட்டுக்கு செல்கிறார், கருணாநிதி நினைவகம் திறப்பு விழாவிற்கு செல்கிறார், விஜயகுமார் பேத்தி திருமணத்திற்கு செல்கிறார். இந்த மாற்றங்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.