அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
மலையாளத்தில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட படம் ஆடு ஜீவிதம். பிரபல கதாசிரியரும், இயக்குனருமான பிளஸ்சி, ஆடு ஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக பிரித்விராஜ் மற்றும் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைப்பதன மூலம் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நுழைந்துள்ளார். இந்த படத்தில் துபாயில் ஒட்டகம் மேய்க்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராக பிரித்விராஜ் நடித்துள்ளார்
கடந்த இரண்டு வருடங்களாக இதன் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சம்மர் விடுமுறையை குறிவைத்து வரும் 2024 ஏப்ரல் 10ஆம் தேதி படம் வெளியாகும் என இதன் ரிலீஸ் தேதி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இதில் புதிய திருப்பமாக, முன்கூட்டியே அதாவது மார்ச் 28ஆம் தேதியே இந்த படம் வெளியாகும் என தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஓடிடி தளங்களுக்கு படங்கள் கொடுப்பது குறித்த ஒப்பந்த பிரச்னை காரணமாக திரையரங்குகள் புதிய மலையாள படங்களை இந்த வராத்திலிருந்து திரையிடுவதில்லை என போராட்டம் அறிவித்துள்ள நிலையில் இப்படி முன்கூட்டியே ரிலீஸ் செய்தியை அறிவித்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதே சமயம் ஓடிடி தளத்தில் இந்த படத்தை வெளியிடுவது குறித்த திரையரங்கு உரிமையாளர்களின் நிபந்தனைக்கு ஏற்ப ஆடுஜீவிதம் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதால், போராட்டம் நடைபெற்றாலும் அல்லது முடிவுக்கு வந்தாலும் இந்த படத்தை வெளியிட எந்த தடையும் இருக்காது என படக்குழுவினர் தரப்பில் சொல்லப்படுகிறது.