ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
கடந்த 2018ம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் குறித்து தனது முகநூலில் ஒரு சர்ச்சையான கருத்தை பதிவிட்டு இருந்தார் நடிகர் எஸ்.வி .சேகர். அதையடுத்து அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று எஸ். வி .சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அந்த அபராத தொகையை செலுத்தி விட்ட எஸ்.வி. சேகர், ஒரு மாத சிறை தண்டனை என்ற தீர்ப்பை எதிர்த்து மேலும் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக அவர் மீதான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.