அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல நடிகராக வலம் வருபவர் சுரேஷ் கோபி. தமிழில் விஜயகாந்த் போல, மலையாளத்தில் ஆக்ஷன் ஹீரோ என பெயர் பெற்ற இவர் கடந்த சில வருடங்களாக குறைந்த அளவிலேயே படங்களில் நடித்து வருகிறார். காரணம் பா.ஜ., கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்.பியாகவும் பொறுப்பு வைத்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி தலைமையில் சுரேஷ் கோபியின் மூத்த மகள் பாக்யாவுக்கும் ஸ்ரேயாஸ் மோகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தனது மகளின் திருமணத்திற்கு ஏற்கனவே கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு சுரேஷ்கோபி அழைப்பு விடுத்திருந்த நிலையில் மணமக்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது சுரேஷ் கோபியின் வீட்டிற்கே வந்து மீண்டும் மணமக்களை வாழ்த்தியுள்ளார். சுரேஷ் கோபியும் கவர்னருக்கு சிறப்பான விருந்தோம்பல் செய்து அவரை கவுரவித்தார். கடந்த சில தினங்களாக கேரளாவில் ஆளும் அரசுடன் எதிர்ப்பு போக்கை கடைபிடித்து வரும் கவர்னர், மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுரேஷ்கோபியின் வீட்டிற்கே வந்து சென்றுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.