எலெக்ஷனால் தள்ளிப்போகும் 'எமெர்ஜென்சி' | 'மெட்டிஒலி' சாந்திக்கு நிஜத்திலும் மருமகளாகும் சந்தியா | பட்டியலின பெண்கள் குறித்த ஆடியோ : கார்த்திக் குமார் புகார் | 'கூலி' டீமின் திடீர் பயணங்கள் : அபுதாபி பறந்தார் ரஜினி, சபரிமலை சென்றார் லோகேஷ் | பிளாஷ்பேக் : மது வீழ்த்திய மகா கலைஞன் விஜயன் | மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : சிம்பொனியை எழுதியிருப்பதாகவும் இளையராஜா தகவல் | கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! |
விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள 'மிஷன் சாப்டர்1' படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியானது. முதலில் குறைவான தியேட்டர்களில் வெளியான இந்த படத்திற்கு தற்போது கூடுதலான திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்திற்காக பணியாற்றிவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் இயக்குனர் விஜய் பேசியதாவது : படம் வெளியாகும்போது எங்களுக்குத் திரையரங்குகள் குறைவாகவே கிடைத்தது. இரண்டு பெரிய படங்கள் வருகிறது எனும்போது எங்களுக்கு அப்படி அமைந்து விட்டது. எங்கோ பிரிவியூ ஷோ போவது போலதான் இருந்தது. திரையரங்குகளில் படம் வெளியான ஒரு பீல் கிடைக்கவே இல்லை. ஆனால், படத்தில் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல லைகா நிறுவனம் கடுமையாக முயற்சி செய்தது. படத்திற்கான ரெஸ்பான்ஸ் பார்த்துவிட்டு தானாகவே ஸ்கிரீன் அதிகப்படுத்தினார்கள். இன்றைய தேதியில் நிறைய திரையரங்குகளில் நிறைய ஸ்கிரீன்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்போதுதான் எங்களுக்கு முதல் வாரம் போல இருக்கிறது.
என்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து வேறொரு ஜானரில் நான் செய்திருக்கும் படம் இது. பட்ஜெட் பெரிதாகத் தேவைப்படுகிறது எனச் சொன்னபோது, அதற்கு முழு ஆதரவு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் லைகாவுக்கும் நன்றி. அந்த அளவுக்கு படத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். 'அச்சம் என்பது இல்லையே' என இருந்த படத்தின் டைட்டிலை 'மிஷன்' என மாற்றி அனைத்து மொழிகளுக்கும் எடுத்துச் சென்றது லைகா நிறுவனம்தான். படப்பிடிப்பில் இருந்து ரிலீஸ் வரை பல சிக்கல்கள் எங்களுக்கு இருந்தது. அதற்கெல்லாம் நிச்சயம் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். என்றார்.