Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் வில்லனாக நடிப்பேன்: அருண்விஜய் பேட்டி

21 ஜூன், 2022 - 05:24 IST
எழுத்தின் அளவு:
I-will-play-the-villain-again:-Arunvijay-interview

சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்த அருண்விஜய்யின் மார்க்கெட் ஒரு கட்டத்தில் டவுன் ஆனது. அந்த நேரத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற படத்தில் வில்லனாக நடித்தார். அவர் நடித்த விக்டர் என்ற அந்த கேரக்டர் அவருக்கு மீண்டும் சினிமாவில் நல்லதொரு என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுத்தது. அதையடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் அருண் விஜய், தற்போது ஹரி இயக்கியுள்ள யானை என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்ட இப்படத்திற்கான புரமோஷன்களில் மாவட்டம் தோறும் சென்று இயக்குனர் ஹரியும், நடிகர் அருண் விஜய்யும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடலூரில் நடைபெற்ற யானை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அருண் விஜய், இந்த யானை படத்திற்காக என்னால் முடிந்த அனைத்து உழைப்பையும் கொடுத்திருக்கிறேன். படமும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. அதனால் என்னுடைய வெற்றி பட வரிசையில் இந்த படமும் இடம் பிடிக்கும். அதோடு என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த பிறகு கதாநாயகனாகவே நடித்து வருகிறேன். அதேசமயம் மீண்டும் நல்ல கதைகள் கிடைத்தால் வில்லனாக நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் அருண்விஜய்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஹரி பேசும்போது, தமிழகம் முழுவதும் இந்த யானை படத்திற்காக மாவட்டம்தோறும் சென்று புரமோஷன் செய்து வருகிறோம். கமலின் விக்ரம் படம் வெற்றி பெற்றிருப்பது தமிழ் சினிமாவுக்கான வெற்றி என்று கூறியுள்ள டைரக்டர் ஹரி, நல்ல கதையை தேர்வு செய்து விட்டு சிங்கம் படத்தின் நான்காம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் இறங்குவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராதிகாவை ஏன் அம்மா என்று அழைக்க வேண்டும்? வரலட்சுமி சரத்குமார் அதிரடி பதில்ராதிகாவை ஏன் அம்மா என்று அழைக்க ... வெளியானது விஜய்யின் ‛வாரிசு' பட பர்ஸ்ட் லுக்: பொங்கல் வெளியீடு வெளியானது விஜய்யின் ‛வாரிசு' பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)