சென்னை, முப்பாத்தம்மன் கோயிலில் வழிபட்ட ஜான்வி கபூர் | ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக் கொலை | 38 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்த சத்யராஜ் | விஜய்யை நேரில் சென்று சந்தித்த அவரது பெற்றோர் | நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ள விஜய் | ரஷ்யா பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | நான் உயிருடன் இருக்கிறேன் : பார்வதி நாயர் திடீர் பதிவு | மார்பிங் புகைப்படத்தால் ரொம்பவும் கஷ்டப்பட்டேன் - கேப்ரில்லா பேட்டி | மகனை பெற்றெடுத்த ஸ்ரீவித்யா நஞ்சன் | கார்த்திக் ராஜ் தவறனாவரா? - மீரா கிருஷ்ணன் சொன்னது என்ன? |
டிக்-டாக் பிரபலமான தனலெட்சுமி, பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வைரல் நாயகியாக வலம் வந்தார். ஆரம்பத்தில் இவருக்கு கெட்ட பெயர் கிடைத்தாலும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போது இவருக்கு நிறையவே ரசிகர்கள் ஆதரவு கிடைத்தது. ஏற்கனவே, யூ-டியூப் வலை தொடர்களில் நடித்து வந்த தனலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வருவார் என அனைவரும் எதிர்பார்க்க, அவருக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் மட்டும் தான்.
தற்போது வரை எந்த ப்ராஜெக்டிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் கமிட்டாகாத தனலெட்சுமி இன்ஸ்டாகிராமில் மட்டும் அவ்வப்போது ஆக்டிவாக போஸ்ட்டுகளை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அண்மையில் இன்ஸ்டாகிராமில் கதறி அழும் வீடியோவை வெளியிட்டிருந்த அவர் 'வாழ்க்கையின் முடிவு மரணம்' என கேப்ஷன் போட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து தனலெட்சுமிக்கு என்னாச்சு? என்று கேட்க ஆரம்பித்தனர். ஆனால், அதன் தொடர்ச்சியாக ப்ராட்காஸ்ட் வீடியோ வெளியிட்ட தனலெட்சுமி 'ரொம்பா நாளா எதுவும் போடல... அதன் வைரலாகனும்னு சும்மா போட்டு விட்டேன்' என்று கூறியுள்ளார். இதைபார்த்து கடுப்பான ரசிகர்கள் தனலெட்சுமியிடம் செல்லமாக கோபம் காட்டி வருகின்றனர்.