அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த சில வருடங்களாக இடைவெளி விட்டு, இடைவெளி விட்டு இப்படம் படமாகி வருகிறது. அடுத்த ஆண்டு இப்படம் எப்படியும் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராம் சரண் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக படத்தின் முதல் சிங்கிளான 'ஜரகண்டி' பாடலை தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது அதைத் தள்ளி வைக்கிறோம் என அறிவித்துள்ளார்கள்.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இருவேறு நிறுவனங்களின் 'டாகுமென்டேஷன்' காரணமாக, தவிர்க்க முடியாத காரணங்களால் 'கேம் சேஞ்சர்' படத்தின் 'ஜரகண்டி' பாடல் வெளியீட்டைத் தள்ளி வைக்கிறோம். வேறொரு நாளில் இது குறித்த அப்டேட்டுன் மீண்டும் வருகிறோம். ராம் சரண் ரசிகர்களின், ஷங்கர் ரசிகர்களின் காத்திருப்புக்கு இது மதிப்பானது. 'கேம் சேஞ்சர்' குறித்து வர உள்ள ஒவ்வொன்றும் சிறப்பானவை. உங்களை மகிழ்விக்க நிகரற்ற தரத்துடன் நான் ஸ்டாப் ஆக குழுவினர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தத் தள்ளி வைப்பு ராம் சரண் ரசிகர்களை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. 'ஜரகண்டி' பாடலுடன் தீபாவளியைக் கொண்டாடலாம் எனக் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். 'ஜரகண்டி' எனப் பெயர் வைத்துவிட்டு தாமதம் செய்கிறார்களே என கோபமடைந்துள்ளார்கள்.