Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாணவர்களை ஒழுங்கு படுத்தியதற்கு தண்டனையா...? : கைதான நடிகை ஜாமினில் விடுதலை

04 நவ, 2023 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Actress-Ranjana-arrested-for-attacking-students-who-traveled-dangerously-in-a-government-bus

தமிழ் சினிமாவில் குணச்சித்ர நடிகையாக இருப்பவர் ரஞ்சனா நாச்சியார். ‛துப்பறிவாளன், இரும்புத்திரை, டைரி, நட்பே துணை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழக பா.ஜ.விலும் இவர் இருக்கிறார்.

சென்னை, கெரும்பாக்கம் பகுதியில் நேற்று சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் சிலர் அபாயகரமான முறையில் படியில் தொங்கியும், ஜன்னல் மீது ஏறியும் பயணம் செய்தனர். இதை அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த ரஞ்சனா பார்த்து, பேருந்தை நிறுத்தினார். பேருந்து ஓட்டுனர், நடத்துனரிடம் இதுபற்றி கேட்க மாட்டீங்களா என ஒருமையில் பேசினார். தொடர்ந்து அதில் பயணித்த மாணவர்களை கிறக்கிவிட்டு அவர்களை தாக்கியும் உள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இதுபற்றி பேருந்து ஓட்டுனர் சரவணன் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்று(நவ., 4) காலை ரஞ்சனாவை அவரது வீட்டிற்கே சென்று போலீசார் கைது செய்தனர். மாணவர்களை தாக்கியது, ஓட்டுனர், நடத்துனரை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ரஞ்சனாவை போலீசார் கைது செய்ய வந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

படிக்கட்டில் பயணம் செய்வதே தவறு. அதிலும் இதில் பயணித்த மாணவர்கள் பேருந்தின் ஜன்னல் மீதெல்லாம் ஏறி அட்டகாசம் செய்துள்ளனர். நேற்று ஏதேனும் விபரீதம் நடந்து இருந்தால் என்னவாகி இருக்கும். அந்த சூழலில் மாணவர்களை நல்வழிப்படுத்தியதற்காக ரஞ்சனாவை கைது செய்ததற்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் பா.ஜ.வை சேர்ந்தவர் என்பதால் அரசு பழிவாங்கும் வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். அதேசமயம் அவர் முன்னெடுத்தது நல்ல விஷயம் தான் என்றாலும் மாணவர்கள் மீது கை நீட்டியது தவறு என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஜாமினில் விடுதலை
கைதான நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. 40 நாட்கள் இருவேளை மாங்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என தெரிவித்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மும்பையில் அபார்ட்மென்ட் வாங்கிய அக்ஷரா ஹாசன்மும்பையில் அபார்ட்மென்ட் வாங்கிய ... 200 படங்களைக் கடந்த 2023 : 250ஐத் தொடுமா ? 200 படங்களைக் கடந்த 2023 : 250ஐத் தொடுமா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in