முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
கிண்டி, வேளச்சேரியைச் சேர்ந்தவர் திருமால், 54; ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 7வது நீதிமன்ற நீதிபதி. இம்மாதம் 18ல் 'பீனிக்ஸ் மால்' அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
பூங்கா கதவு மூடுவது தொடர்பாக, அங்கிருந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து சேர்ந்து, நீதிபதியை ஆபாச வார்த்தைகளில் திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில், நீதிபதி திருமால் புகார் அளித்தார். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகர் ஜெயமணி, மாரிமுத்துவை கிண்டி போலீசார், நேற்று கைது செய்தனர். பின், ஜாமினில் விடுவித்தனர்.