ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கியவர் சற்குணம். இவர் பல மாதங்களாக தனுசுக்காக காத்திருந்து சமீபத்தில்தான் நய்யாண்டி என்ற தனது மூன்றாவது படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். இதில் கும்பகோணத்தில் குத்து விளக்கு செய்து விற்பனை செய்யும் இளைஞனாக நடிக்கிறார் தனுஷ். இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் இப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு, அவருக்கு கனகச்சிதமான பொருந்தும் காதல் கலந்த காமெடி கதை என்பதால் ஒவ்வொரு காட்சிகளையும் செம ஜாலியான மூடில் நடித்து வருகிறாராம். இதனால் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நகர்த்தி வருகிறாராம் சற்குணம்.
இப்படத்தில் நடித்து வருவது பற்றி தனுஷ் கூறுகையில், சற்குணம் இயக்கிய முந்தைய படங்களைப் பார்த்திருக்கிறேன். இரண்டும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதில் களவாணி பக்கா கமர்சியல் படம். அந்த மாதிரியான ஒரு கமர்சியல் பார்முலாவில்தான் இப்போது நய்யாண்டி படத்திற்கும் கதை பண்ணியுள்ளார். அவர் பண்ணியுள்ள காதல் மற்றும் காமெடி காட்சிகள் ரொம்ப இயல்பாக உள்ளது. காட்சிகளில் நடித்து விட்டு வீட்டுக்கு வந்தபிறகும் அந்த காட்சிகள் மனதிற்குள் நிழலாடுகின்றன. அந்த அளவுக்கு அற்புதமாக காட்சியமைத்திருக்கிறார் சற்குணம. சில இயக்குனர்களின் ஒரு படத்தில் நடித்த பிறகும் மீண்டும் அவர்கள் இயக்கத்தில் நடிக்கும் ஆசை ஏற்படாது. ஆனால் சற்குணத்தின் கதை இயக்கத்தை பார்க்கையில் மீண்டும் மீண்டும் அவர் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது என்கிறார் தனுஷ்.