இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் | இயக்குனரே பொறுப்பேற்பு | தமிழ் ரசிகர்களைக் கவரும் மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | கல்வி விழா : விஜய்யின் இரண்டு புதிய திட்டம் | புஷ்பா 2 பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மீனா | தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவுக்கு முழுக்கு : கங்கனா அறிவிப்பு | 'சலார் 2' - டிராப் ஆகிறதா, தள்ளிப் போகிறதா ? | 'அஅஅ' - 'குட் பேட் அக்லி' முதல் பார்வை : என்ன வித்தியாசம் ? |
விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் திரைக்கு வந்ததை அடுத்து தற்போது ஹரி இயக்கும் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றதை அடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கிறது. இதில் காமெடியனாக யோகி பாபு நடித்து வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் விஷாலுக்கு ஒரு முருகன் சிலையை பரிசாக கொடுத்திருக்கிறார் யோகி பாபு. அதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விஷால்.
அதோடு, காரைக்குடியில் காரில் சென்றபோது, ஒரு கடையில் முருகன் சிலையை பார்த்த யோகி பாபு, உடனே அதை வாங்கி எனக்கு பரிசாக கொடுத்தார். இது ஒரு மறக்க முடியாத பரிசு. ஐ லவ் யூ, நன்றி, கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார் விஷால். ஆக்ஷன் கலந்த சென்டிமெண்ட் கதையில் உருவாகி வரும் இந்த விஷால் 34வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.