விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் | சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் சிபி சக்ரவர்த்தி | எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி |
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. அவர் நடிக்காத சினிமா இல்லை என்கிற அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு மீது தயாரிப்பாளர் ஒருவர் 20 லட்சம் பணமோசடி புகார் ஒன்றை போலீசில் கொடுத்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு: சென்னை வளசரவாக்கம், பழனியப்பா நகரை சேர்ந்த ஆசீர் என்பவர் நேற்று விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் யோகி பாபு மீது புகார் மனு அளித்தார். அதில் அவர் "நான் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். 'ஜாக் டேனியல்' என்ற படத்தில் நடிப்பதற்காக நடிகர் யோகி பாபுவுக்கு 65 லட்சம் சம்பளமாக பேசி அதில் முன்பணமாக 20 லட்சம் கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட யோகி பாபு படத்தில் நடிக்க வராமலும், பணத்தை திரும்ப தராமலும் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.