அமெரிக்க தமிழர்கள் உருவாக்கிய படம் | பிளாஷ்பேக் : நம்பியார் ஜோடியாக அறிமுகமான பாக்கியம் | நான் ஓரினச்சேர்க்கையாளரா... : சுசித்ரா குற்றச்சாட்டுக்கு மாஜி கணவர் கார்த்திக் பதில் | இயக்குனரின் கெட்ட பெயர் தான் ஓடிடி ரிலீஸை தடுக்கிறது : டொவினோ தாமஸ் பதிலடி | சல்மான்கான் மன்னிப்பு கேட்டால் பரிசீலனை செய்ய தயார் : பிஸ்னாய் சமூகம் அறிவிப்பு | கமல் பட வாய்ப்பை மறுத்தாரா பிரேமலு பட இயக்குனர்? | இன்ஸ்பெக்டர் ரிஷியை பாராட்டிய ரஜினி : ஜே.எஸ் நந்தினி நெகிழ்ச்சி | விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் |
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து இப்போது குணச்சித்ர நடிகையாக அசத்தி வருபவர் சரண்யா பொன்வண்ணன். இவரது கணவரான இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனும் சினிமாவில் நடித்து வருகிறார். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
பார்க்கிங் தொடர்பாக சரண்யாவுக்கும், பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவருக்கும் சிறுசிறு தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவி தனது வாயில் கேட்டை திறந்தபோது அந்த கேட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரண்யாவின் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சரண்யா - ஸ்ரீதேவி இடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சரண்யா தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி சரண்யா மீது விருகம்பாக்கம் போலீஸில் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். அதோடு இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளையும் அவர் சமர்ப்பித்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.