அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
இயக்குநர் திருச்செல்வம் எதிர்நீச்சல் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்து அசத்தி வருகிறார். மேலும், அதே தொடரில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஜீவானந்தம் கதாபாத்திரத்தை முக்கிய கதாபாத்திரமான ஈஸ்வரியின் முன்னாள் காதலனாக காட்டி வருகின்றனர். இதனையடுத்து ஜீவானந்தம் தான் ஹீரோவா? க்ளைமாக்ஸில் அவரும் ஈஸ்வரியும் ஒன்று சேர்வார்களா? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள திருச்செல்வம், 'ஆரம்பத்தில் ஜீவானந்தம் கதாப்பத்திரம் சில நாட்களுக்கு என்று தான் தொடங்கப்பட்டது. இப்போது கதையின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப பயணிக்க தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் கதையின் போக்கு மற்றும் ரசிகர்களின் வரவேற்புக்கு ஏற்றவாறு ஜீவானந்தம் கதாபாத்திரம் தொடரும். ஆனால், அதிக நாட்கள் ஜீவானந்தம் கதாபாத்திரம் இருக்காது' என்று கூறியுள்ளார்.