மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி |
தமிழில் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி போன்ற நல்ல படங்களை இயக்கியவர் சேரன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஜெ.கே எனும் நண்பனின் வாழ்க்கை, திருமணம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கடந்த சில வருடங்களாக இவர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இனி அந்தபடம் துவங்க சாத்தியமில்லை என சேரன் கூறினார்.
இந்நிலையில் லிவ் ஒடிடி தளத்திற்காக புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார் சேரன். இதனை நடிகர் சரத்குமார் வழங்குகிறார். இந்த தொடரில் பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை 6 எபிசோடுகள் ஆக உருவாக்கியுள்ளனர். இந்த வெப் தொடருக்கு ' ஜர்னி' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.