தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா | குணா பாடலுக்கு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம் : மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம் | நான் சிங்கிள், மிங்கிளாக விரும்பவில்லை : ஸ்ருதிஹாசன் | பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி! | அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோயிலுக்கு சென்ற ரஜினி | 100ஐத் தொட்டது 2024 தமிழ்ப் படங்கள் ரிலீஸ் | சூர்யா 44 படப்பிடிப்பு ஜுன் முதல் ஆரம்பம் | மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்த ஸ்ரீதேவி | கழுத்தில் தாலியுடன் ஆர்த்தி சுபாஷ் : ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் | அரசியல் பிரபலத்துடன் திருமணமா? - ரேகா நாயர் ஓபன் டாக் |
பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக 2019ம் ஆண்டு திருமணம் என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் 47வது படத்தை இயக்கப் போகிறார் சேரன். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது குறித்த அறிவிப்பினை ஒரு போஸ்டர் மூலம் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கையில் கத்தியுடன் உடம்பில் ரத்தம் வழிந்த நிலையில் அமர்ந்திருக்கிறார் கிச்சா சுதீப். இப்படத்தின் இடம்பெறும் மற்ற நடிகர்- நடிகைகள், டெக்னீஷியன்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.