22 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கிய கே.ரங்கராஜ் | கொளுத்தும் வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் ஏமாற்றம் : மன்னிப்பு கேட்ட பிரபுதேவா | சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் | சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் |
'நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர்,' படங்களின் இயக்குனரான ராஜமவுலி தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 'ஆர்ஆர்ஆர்' படம் முடித்த பின் அப்படத்திற்கான ஆஸ்கர் விருதுப் பணிகளில் பிஸியாக இருந்தார். ஆஸ்கர் விருது வென்ற பின் அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள ராஜமவுலி தனது தமிழக சுற்றுப் பயணம் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
“தமிழகத்தின் மத்தியப் பகுதியில் சாலைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. கோயில்களுக்கு செல்ல விரும்பிய என் மகளுக்காக அதில் இறங்கினோம். ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்கு ஜுன் கடைசி வாரத்தில் சென்றோம். இருந்த சில நாட்களில் பனிப்பாறையின் நுனியை மட்டுமே தொட முடிந்தது. நேர்த்தியான கட்டிடக் கலை, அற்புதமான பொறியியல், பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில ஊர்களில் அவர் சாப்பிட்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டு, “ஒரு வாரத்தில் 2, 3 கிலோ எடை கூடிவிட்டேன். வெளிநாட்டுப் பயணம், சாப்பாடு ஆகியவற்றில் மூன்று மாதங்கள் போன பிறகு நமது தாய் மண்ணில் சுற்றுப் பயணம் செய்தது புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தந்தது,” என்றும் தெரிவித்துள்ளார்.