அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரியில் நாயகனாக நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம் அவருக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த குணசித்ர வேடத்தில் நடித்த மாமன்னன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. தற்போது வரை 50 கோடி வசூலித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முக்கியமாக வடிவேலுவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருப்பதோடு வித்தியாசமான வடிவேலுவை மாரி செல்வராஜ் திரையில் கொண்டு வந்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், மறுபிரவேசத்தில் மாமன்னன் படத்தின் மூலம் வெற்றி பாதையை நோக்கி மீண்டும் திரும்பி இருக்கிறார் வடிவேலு. இந்த நிலையில் அடுத்தபடியாக லைப் இஸ் பியூட்டிபுல் என்ற இத்தாலியன் படத்தை வடிவேலுவை நாயகனாக வைத்து ரீமேக் செய்யப் போகிறாராம் மாரி செல்வராஜ். இந்த தகவலை வடிவேலுவே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இந்த படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கும் வடிவேலு, மாமன்னனை போலவே அந்த படமும் என்னை மீண்டும் வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.