பட்டியலின பெண்கள் குறித்த ஆடியோ : கார்த்திக் குமார் புகார் | 'கூலி' டீமின் திடீர் பயணங்கள் : அபுதாபி பறந்தார் ரஜினி, சபரிமலை சென்றார் லோகேஷ் | பிளாஷ்பேக் : மது வீழ்த்திய மகா கலைஞன் விஜயன் | மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : சிம்பொனியை எழுதியிருப்பதாகவும் இளையராஜா தகவல் | கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது |
காமெடியனாக நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் கதையின் நாயகனாக உருவெடுத்த போது எதிர்பாராத விதமாக அரசியல் களத்துக்குள் வந்தார். அப்போது விஜயகாந்துக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் தீவிரமான பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்த திமுக தோல்வி அடைந்ததை அடுத்து வடிவேலுவின் சினிமா மார்க்கெட்டும் டவுன் ஆனது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக எந்த படத்தில் நடிக்காமல் இருந்தவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார். அப்போது அவர் கதையின் நாயகனாக நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம் தோல்வி அடைந்த போதும், குணச்சித்ர வேடத்தில் நடித்த மாமன்னன் படம் வெற்றியை கொடுத்தது.
இந்த நிலையில் வடிவேலு திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. அதுகுறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் என்னிடத்தில் இல்லை. நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தப் போகிறேன்'' என்று பதில் கொடுத்து இருக்கிறார் வடிவேலு.