தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா | குணா பாடலுக்கு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம் : மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம் | நான் சிங்கிள், மிங்கிளாக விரும்பவில்லை : ஸ்ருதிஹாசன் | பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி! | அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோயிலுக்கு சென்ற ரஜினி | 100ஐத் தொட்டது 2024 தமிழ்ப் படங்கள் ரிலீஸ் | சூர்யா 44 படப்பிடிப்பு ஜுன் முதல் ஆரம்பம் | மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்த ஸ்ரீதேவி | கழுத்தில் தாலியுடன் ஆர்த்தி சுபாஷ் : ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் | அரசியல் பிரபலத்துடன் திருமணமா? - ரேகா நாயர் ஓபன் டாக் |
காவல்துறையின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிரே சர்வதேச போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நடிகர் கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகர் கானா பாலா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கார்த்தி பேசியதாவது:
இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர். பள்ளிகளுக்கு அருகே கூட போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள்தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள்தான். நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியும்.
போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும். என்றார்.