இயக்குனரே பொறுப்பேற்பு | தமிழ் ரசிகர்களைக் கவரும் மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | கல்வி விழா : விஜய்யின் இரண்டு புதிய திட்டம் | புஷ்பா 2 பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மீனா | தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவுக்கு முழுக்கு : கங்கனா அறிவிப்பு | 'சலார் 2' - டிராப் ஆகிறதா, தள்ளிப் போகிறதா ? | 'அஅஅ' - 'குட் பேட் அக்லி' முதல் பார்வை : என்ன வித்தியாசம் ? | ஒரே படத்தில் கமிட்டான மூன்று சீரியல் நடிகைகள் | வறுமையில் தவிக்கும் காஜா பெரோஸ் : உதவும் திருமுருகன் | ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி |
தெலுங்குத் திரையுலகத்தின் மெகா குடும்பம் என அழைக்கப்படும் சிரஞ்சீவி குடும்பத்தில் அவரது தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ், நடிகை லாவண்யா திரிபாதி இருவருக்கும் நேற்று ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 'மிஸ்டர்' தெலுங்குப் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க ஆரம்பித்த 2016ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாகவே கிசுகிசுவாக பரவிய இவர்களது காதல், நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவந்தது. உத்தரப்பிரதேசம் அயோத்யாவைச் சேர்ந்த லாவண்யா மும்பையில் படித்து வளர்ந்தவர். 'அந்தாள ராட்சசி' என்ற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் 'பிரம்மன், மாயவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களில் இவர்களது திருமணம் நடக்குமா அல்லது அடுத்த வருடத் துவக்கத்தில் நடக்குமா என்பது தெரியவில்லை. ஆனாலும், 'டெஸ்டினேஷன் வெட்டிங்' செய்ய காதல் ஜோடி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி இத்தாலி நாட்டில் உள்ள ரிசார்ட் அல்லது ஹோட்டலில் திருமணத்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான இடங்களைத் தேடி வருகிறார்களாம். திருமணத்திற்குப் பிறகு லாவண்யா திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என வருண் குடும்பத்தினர் கண்டிப்புடன் கூறியதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள். அதற்கு லாவண்யா சம்மதித்த பிறகுதான் திருமண நிச்சயத்தையும் நடத்தினார்கள் என்கிறார்கள்.