பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இட்னானி நாயகியாக நடித்தார். முக்கிய வேடத்தில் ராதிகா நடித்தார். ஐசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகம் உருவாகும் என்று குறிப்பிட்டு இருந்தார் கவுதம் மேனன்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் கூறுகையில், ‛‛வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை கவுதம் மேனன் எழுதி வருகிறார். அதனால் அவர் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்ததும் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு சிம்புவும் ஆர்வமாக இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.