குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
குஷ்பு, நயன்தாரா உள்பட பல நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தாவுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் தனது வீட்டிலேயே ஒரு கோயில் கட்டி இருக்கிறார். அந்த கோயிலில் சமந்தாவின் சிலையை வைத்திருக்கிறார். இந்த கோவில் ஏப்ரல் 28ம் தேதியான நாளை திறக்கப்பட இருப்பதாக ஒரு செய்தியை அந்த ரசிகர் வெளியிட்டு இருக்கிறார். சமந்தாவுக்காக அவர் உருவாக்கி உள்ள அந்த சிலையானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை சமந்தா, பிரதியுஷா என்ற ஒரு அமைப்பை தொடங்கி அதன் மூலம் தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வருகிறார். அதற்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த கோயிலை தான் கட்டி உள்ளதாகவும், இதுவரை தான் சமந்தாவை நேரில் சந்தித்ததில்லை என்றும் அந்த ரசிகர் கூறியுள்ளார்.