ரஜினியை சந்தித்த ஆர்டிஎக்ஸ் இயக்குனர் | கதை நாயகன் ஆன தயாரிப்பாளர் | வானத்தைப்போல ஸ்வேதா திருமணம்: காதலரை மணந்தார் | அமெரிக்க திரைப்பட விழாவில் விஜய்சேதுபதி படம் | மும்பை லோகண்ட்வாலா சந்திப்புக்கு ஸ்ரீதேவி பெயர் | எனக்கு உயிர் கொடுத்தவர் விஜயகாந்த் : நினைவிடத்தில் நமீதா உருக்கம் | இந்த ஆண்டும் சாதனை மாணவர்களை சந்திக்கிறார் விஜய் | யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி |
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் ஒரு பிரிவினர் 'குற்றப் பரம்பரையினர்' என்று அறிவிக்கப்பட்டு கொடூரமான சித்ரவதைகளை அனுபவத்தனர். சுதந்திரத்திற்கு பிறகுதான் குற்றம்பரம்பரையினர் என்ற அடையாளம் நீக்கப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு பல நாவல்கள் எழுதப்பட்டுள்ளது. தற்போது நடிகராக உள்ள வேல ராமமூர்த்தி குற்றப்பரம்பரை என்ற பெயரிலேயே நாவல் ஒன்றை எழுதி உள்ளார். ரத்னகுமார் என்பவரும் எழுதி உள்ளார்,
இதில் வேல ராமமூர்த்தியின் நாவலை பாலாவும், ரத்னகுமார் கதையை பாரதிராஜாவும் இயக்குவதாக அறிவித்தார்கள். ஆனால் இருவருமே இந்த பணிகளை தொடங்கவில்லை. அவரவர் வெவ்வேறு படங்களில் பிசியாகி விட்டார்கள். இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான சசிகுமார் குற்றப்பரம்பரையை வெப் தொடராக இயக்க இருப்பதாக அறிவித்தார்.
தற்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இந்த தொடரை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரித்து, ஒளிப்பதிவு செய்கிறார், வேல ராமமூர்த்தி இதற்கான திரைக்கதை, வசனம் எழுதுவதோடு அவரே முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நடிக்க நடிகை தேர்வு நடந்து வருகிறது. பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். அடுத்த மாதம் மதுரையை சுற்றியுள்ள மலை கிராமங்களில் படப்பிடிப்பு தொடங்குகிறது.