வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
நடிகை நயன்தாரா திருமணம், குழந்தை வாழ்க்கைக்கு பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் தற்போது தமிழில் எல்.ஐ.சி, டெஸ்ட், மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 போன்ற படங்களில் நடிக்கிறார். இதுதவிர யானையை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.
இது அல்லாமல் புதிய படங்களில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நயன்தாராவை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். இது ஒரு பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட கதையாம். நயன்தாராவுக்கும் கதையில் திருப்தி ஏற்படவே இப்போது அடுத்தகட்ட வேலைகள் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.