ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சமீபத்தில் நடந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் முதுமலை யானைகள் முகாமில் யானைகளை பராமரித்து வரும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினரின் வாழ்க்கையை சொல்லும் விதமாக உருவாகியிருந்த தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்திற்கு சிறந்த டாக்குமென்டரி படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த டாக்குமென்ட்ரியை கார்த்திகி கொன்சால்வெஸ் என்பவர் இயக்கினார். இந்த படக்குழுவையும், யானை பராமரிப்பு தம்பதியரையும் பிரதமர், முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் படக்குழுவினரான இயக்குனர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களை பாராட்டிய பிரதமர், இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தி உள்ளதாக வாழ்த்தினார்.