திடீர் இயக்குனரான ஜோதி கிருஷ்ணா | ஒரு நொடி இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் | 22 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கிய கே.ரங்கராஜ் | கொளுத்தும் வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் ஏமாற்றம் : மன்னிப்பு கேட்ட பிரபுதேவா | சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் | சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை |
சாமி பட வில்லன் நடிகர் இறந்ததாக வெளியான வதந்திக்கு, அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விக்ரம் நடித்த, சாமி படத்தில் பெருமாள்பிச்சை என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்தவர் கோட்டா சீனிவாசராவ், 80. வில்லனாக மட்டுமின்றி, குணச்சித்திர வேடத்தில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவர் இறந்து விட்டதாக, செய்தி பரவியது. ரசிகர்களும் அவரது வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். சில மணி நேரத்தில், அது வதந்தி என தெரியவந்தது.
இதுகுறித்து, கோட்டா சீனிவாச ராவ் வெளியிட்ட வீடியோ பதிவில், 'என் மரணச் செய்தி பொய்யானது. ரசிகர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம். நான் நலமுடனும், வலிமையுடனும் இருக்கிறேன். இத்தகைய வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.