ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் எம்.எஸ்.பாஸ்கர். டப்பிங் கலைஞரான இவர் சினிமாவில் குணச்சித்திரம், காமெடி, வில்லன் என்று பல்வேறு கேரக்டர்களில் நடித்தார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க கூடியவர் என்ற பெயர் எம்.எஸ்.பாஸ்கருக்கு உண்டு. இதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர், தற்போது 'அக்கரன்' என்ற படத்தில் முதல்முறையாக கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது மகள்களாக 'பள்ளிப் பருவத்திலே' வெண்பா, பிரியதர்ஷினி நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் கபாலி விஷ்வந்த், நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம் குமார், கார்த்திக் சந்திரசேகர் நடிக்கின்றனர். குன்றம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கே.டி தயாரிக்கிறார். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.ஆர்.ஹரி இசை அமைக்கிறார். அருண் கே.பிரசாத் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குன் அருண் பிரசாத் கூறியதாவது: நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பாஸ்கரின் மகள் பிரியதர்ஷினியை, அரசியல் செல்வாக்கு மிகுந்த நமோ நாராயணனின் ஆட்கள் கடத்திச் சென்று கொன்றுவிடுகின்றனர். அந்த பழியை எம்.எஸ்.பாஸ்கர் மீதே சுமத்துகிறார்கள். அவர்களை எம்.எஸ்.பாஸ்கர் எப்படி தந்திரமாகப் பழிவாங்கி, இறுதியில் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பது கதை. மதுரை பின்னணியில் கதை நடக்கிறது. வரும் மார்ச் மாதம் ஓடிடியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அக்கரன் என்றால், யாராலும் அழிக்க முடியாதவன் என்று பொருள். என்றார்.