படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'லியோ' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம்தான் வெளியானது. தற்போதுதான் முதல் கட்டப் பதிவு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படத்திற்கான அறிவிப்பு வெளியான அன்றே இப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
கேரளாவில் விஜய் படங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. அங்குள்ள விஜய் ரசிகர் மன்றத்தில் இப்போதே 'லியோ' படத்திற்கான ரசிகர்கள் காட்சிக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளார்கள். கண்ணூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஐந்து தியேட்டர்களில் அதற்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது பற்றிய போஸ்டரையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
பட அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே ஒரு படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகியிருப்பது, அதுவும் கேரளாவில் ஆரம்பமாகியிருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். படம் வெளியாக இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது. அதற்குள் என்னென்ன செய்வார்களோ ?.