சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நான் கடவுள் இல்லை படம் நாளை (பிப்.3) வெளிவருகிறது. இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 1981ம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானேன். இன்று 40 ஆண்டுகளை கடந்தும் அதே வேகத்துடனும், விவேகத்துடனும் சமூக உணர்வோடும் இயங்கிக் கொண்டிருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 70 படம் இயக்கி இருக்கிறேன்.
என் மகன் விஜய்யை டாக்டராக்க விரும்பினேன். அவன் நடிகராக வேண்டும் என்றான். மகனின் கனவை நிறைவேற்ற வேண்டியது தந்தையின் கடமை அல்லவா? அதனால் அவனை நடிகனாக்கினேன். அவரை வைத்து நானே படங்கள் தயாரித்து, இயக்கி அவரை ஒரு வெற்றிகரமான ஹீரோவாக்கினேன். அதன்பிறகு பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வந்தனர். அவரும் தன்னுடைய கடின உழைப்பால் தன்னை செதுக்கி கொண்டு இன்று மக்கள் நெஞ்சங்களில் தளபதியாக உயர்ந்திருக்கிறார்.
ஒரு நடிகருக்கு ரசிகர் மன்றம் முக்கியம் என்பதால் நானே முதல் ரசிகனாக இருந்து ரசிகர் மன்றம் தொடங்கினேன். அது இப்போது மக்கள் இயக்கமாக மாறி, மாபெரும் இளைஞர் படையை கொண்டிருக்கிறது.
எல்லாவற்றிலும் மகிழ்ச்சி அடைந்த நான், அந்த மகிழ்ச்சியால் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடக்கூடாது என்பதால் இன்றைய இளைய தலைமுறையோடு ஓடிக் கொண்டிருக்கிறேன். அதன் விளைவுதான் நான் கடவுள் இல்லை படம். சட்டம் ஒரு இருட்டறையில் எந்த அளவிற்கு உழைத்தேனோ அதே அளவிற்கு இந்த படத்திற்கும் உழைத்திருக்கிறேன். ஒரு வெற்றி கலைஞனாகவே என் கடைசி மூச்சு அடங்க வேண்டும் என்று விரும்பியே இந்த படத்தை நான் இயக்கி இருக்கிறேன். என் உழைப்புக்கு வெற்றியை பரிசாக மக்கள் தருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.