ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து இந்தியா முழுமைக்கும் அறியப்படும் நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். அதைத்தொடர்ந்து, அடுத்ததாக அவர் நடித்த சாஹோ திரைப்படத்தின் மீது எல்லோருக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆக்சன் படமாக உருவான இந்த படத்தை சுஜித் என்பவர் இயக்கியிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த படம் தோல்வியை தழுவி பிரபாஸுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக படத்தின் இயக்குனரான சுஜித் பிரபாஸின் திறமையையும் புகழையும் சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் நான்கு ஆண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்த சுஜித், தற்போது தெலுங்கு சினிமாவின் இன்னொரு முன்னணி நடிகரான பவன் கல்யாண் படத்தை இயக்குகிறார். இதற்கான துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது. டிவி தானய்யா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்பது மட்டுமே இப்போதைக்கு உறுதியாகி உள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இயக்குனர் கிரிஷ் டைரக்ஷனில் நான் நடித்து வந்த ஹரிஹர வீர மல்லு படத்தை சமீபத்தில் தான் பவன் கல்யாண் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.