ஓராண்டாக நடந்த 'அமரன்' படப்பிடிப்பு நிறைவு : விரைவில் ரிலீஸ் அறிவிப்பு | இன்றும் டிரெண்ட்டில் நாட்டாமை ‛மிக்சர்' மாமா : யார் இவர்... - கேஎஸ் ரவிக்குமார் உடைத்த ரகசியம் | 27 ஆண்டுகளுக்கு பிறகு கஜோலுடன் இணையும் பிரபுதேவா | நேற்று 'மெய்யழகன்', இன்று 'வா வாத்தியார்' - கார்த்தி படங்களின் அப்டேட் | அமரன் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்த சிவகார்த்திகேயன் | மீண்டும் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா | சிரஞ்சீவி படத்தில் இத்தனை இளம் நடிகைகளா? | தள்ளிப்போகும் தனி ஒருவன் 2? | ஜூலை மாதத்தில் துவங்கும் கலகலப்பு 3 படப்பிடிப்பு | தந்தையின் நண்பர்கள் புகைப்படம் பகிர்ந்து மம்முட்டி படத்திற்கு வாழ்த்து கூறிய சிபிராஜ் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் சிரஞ்சீவி. அவரது பல படங்கள் வசூல் சாதனை படைத்தவை. இந்த பொங்கலுக்கு அவர் நடித்து வெளிவந்துள்ள 'வால்டர் வீரய்யா' படமும் நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநில முக்கிய நகரங்களில் ஒன்றான விசாகப்பட்டிணத்தில் சிரஞ்சீவி வீடு கட்டப் போவதாக அறிவித்தது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தை விட்டு அவர் விசாகப்பட்டிணத்தில் வசிக்கப் போகிறார் என்ற வதந்தியும் பரவியது. அதை பலரும் அரசியலாக்கி செய்திகளை வெளியிட்டனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து சிரஞ்சீவி, “அங்கு ஒரு இடத்தை வாங்கினோம் என்பது பற்றி சொன்னேன், வேறு எதுவுமில்லை. எனது மகன் ராம் சரண் கோவாவில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளார். எனக்கு ஊட்டியில் வீடு கட்ட வேண்டும் என்று ஆசை. அது ஏறக்குறைய ரெடியாகிவிட்டது. அவற்றை முடித்த பின் விசாகப்பட்டிணத்திலும் வீடு கட்டலாம் என்றேன்,” என்று தெரிவித்துள்ளார்.
பல தெலுங்குப் படங்கள் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளன. சிரஞ்சீவியின் பல படங்களும் அதில் அடங்கும். இந்திய நடிகர்கள் பலருக்கும் ஊட்டி மிகவும் பிடித்தமான இடம். சிலருக்கு அங்கு வீடுகள் மட்டுமல்ல எஸ்டேட்களும் இருக்கின்றன.