பிரபாஸின் புஜ்ஜியை வடிவமைத்ததில் ஆனந்த் மஹிந்த்ரா பெருமிதம் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் ராம் ரிலீஸ் ; தயாரிப்பாளர் உறுதி | படப்பிடிப்பில் பிரித்விராஜிடம் இருமுகம் காட்டும் மோகன்லால் | விவாகரத்து செய்தி - நமீதா கொடுத்த விளக்கம்! | ஓடிடியால் தியேட்டருக்கு செல்லும் மனநிலை குறைந்து வருகிறது! -ஹிப் ஹாப் ஆதி பேச்சு | மே 28ம் தேதி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அன்னதானம்! விஜய் வெளியிட்ட அறிக்கை | 3வது திருமணம் செய்து கொண்ட நடிகை மீரா வாசுதேவன்! | மோகனின் ஹரா படத்தின் டிரைலர் வெளியானது! | 2024ன் மற்றுமொரு 25 நாள் படம் 'அரண்மனை 4' | தமிழில் பிஸியாக இருக்கும் கிரித்தி ஷெட்டி |
பாகுபலி, பாகுபலி 2 , ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த ஆர்ஆர்ஆர் படம் சமீபத்தில் ஜப்பானில் திரையிடப்பட்டது.
இந்த நிலையில் ராஜமவுலியின் படங்களுக்கு வழக்கமாக கதை எழுதி வரும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத் தற்போது ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறுகையில், ஏற்கனவே ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் இரண்டு பாகங்களாக உருவானது போன்று அடுத்து மகேஷ்பாபுவை வைத்து அவர் இயக்கும் படமும் இரண்டு பாகங்களும் அதற்கு மேலும் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஹீரோ கேரக்டர் ஒன்று தான். என்றாலும் கதைக்களமானது வெவ்வேறாக இருக்கும். அந்த வகையில் இந்த படம் நான்கு பாகங்கள் உருவாவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்த படத்திற்கான கதை தற்போது தயாராகி விட்டதால் 2023ம் ஆண்டில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.