காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் வங்கி கடனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். முன்பு நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட சிவாஜி தலைவராக இருந்தபோது வங்கியில் கடன் பெறப்பட்டது. இந்த கடனை நீண்ட காலம் திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருந்தது. பின்னர் விஜயகாந்த் தலைவரான பிறகு கலை நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தார்.
நாசர் தலைவரான பிறகு வங்கி கடன் பெறாமலேயே நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தார். அது சிறப்பான தொடக்கமாகவும் அமைந்தது. அதன்பிறகு நடந்த நிர்வாக மாற்றம், ஆட்சி மாற்றம், வழக்குகள், உள் குழப்பங்களால் 70 சதவிகித பணிகளோடு கட்டிடம் நின்று போனது.
தற்போது நாசர் மீண்டும் தலைவராகி இருக்கும் நிலையில் கட்டிட பணிகளை தொடங்க நிதி வசதி இல்லை. இதனால் சங்கத்தின் சார்பில் வங்கியில் கடன் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 30 கோடி கடன்பெற தலைவர் நாசரும், துணை தலைவர் பூச்சி முருகனும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். கடன் கிடைத்ததும் 6 மாதத்தில் கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.