ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் |
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை தவம் செய்தால் இது அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
கோயிலில் 60, 70, 80, 90, 100 வயதை எட்டியவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு இன்று(டிச., 12) குடும்பத்துடன் வந்த நடிகர் சிவகார்த்திகேயன் கோ பூஜை, கஜ பூஜை செய்தும், சுவாமி அம்பாள் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தியும் சுவாமி தரிசனம் செய்தார். பூஜைகளை கணேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.