திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
பொன்ராம் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுகீர்த்திவாஸ் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'டிஎஸ்பி'. இதுவரை விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படங்களில் இந்தப் படத்திற்குத்தான் மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்தது. ரசிகர்களின் வரவேற்பையும் பெறாத இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஏன் நடித்தார் என அவரை நேசிக்கும் ரசிகர்களே கேள்வி எழுப்புகிறார்கள்.
படத்திற்கு முதல் நாளிலேயே வரவேற்பும் வசூலும் இல்லாத நிலையில் மறுநாளே இயக்குனர் பொன்ராம், விஜய் சேதுபதி படம் வெற்றி என 'கேக்' வெட்டி கொண்டாடினார்கள். ஆனால், அந்த புகைப்படங்கள் விஜய் சேதுபதியின் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்படவில்லை. பாக்ஸ் ஆபீசிலும் படம் படுதோல்வி என்று தெரிந்தும் விஜய் சேதுபதியின் டுவிட்டர் கணக்கைப் பார்க்கும் 'அட்மின்' படத்தை ஒரு வெற்றிப் படம் போலவே தொடர்ந்து டுவீட் செய்து வருகிறார். ஆனால், கமெண்ட்டுகளை 'ஆப்' செய்துவிட்டு மட்டும் டுவீட் செய்கிறார்கள்.
படம் வெளியான டிசம்பர் 2ம் தேதியன்று மட்டும் கமெண்ட்டுகள் 'ஆன்' செய்யப்பட்டிருந்தன. அதற்குப் பிறகு பதிவிட்ட டுவீட்டுகள் எதிலும் கமெண்ட் பகுதி 'ஆப்' செய்யப்பட்டே பதிவிடப்படுகின்றன.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து 2018ல் வெளிவந்த '96' படத்திற்குப் பிறகு வெளிவந்த படங்கள் 'காத்து வாக்குல ரெண்டு காதல், மாமனிதன்' படங்கள் மட்டுமே சுமாராக ஓடியது. மற்ற படங்கள் தோல்வியைச் சந்தித்துள்ளன. தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் விஜய் சேதுபதி தமிழில் சரியான கதைகளைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என அவர்களது ரசிகர்களும், வினியோகஸ்தர்களும் எதிர்பார்க்கிறார்கள்.