‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் வேடத்தில் நடித்து தென்னிந்திய மொழி ரசிகர்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் ராணா. தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விமானப்பயணம் மேற்கொண்ட ராணா ஹைதராபாத்தில் வந்து இறங்கியபோது தன்னுடைய லக்கேஜ் ஒன்று மிஸ் ஆனதை கவனித்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த விமான ஊழியர்களிடம் கேட்டபோது அவருடைய லக்கேஜ் எப்படி மிஸ் ஆகி இருக்கக்கூடும் என்பது பற்றி கூட யாராலும் தகவல் சொல்ல முடியாமல் கையை பிசைந்துள்ளனர்.
இதுபற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராணா, இந்தியாவிலேயே மிக மோசமான விமான சர்வீஸ் என்று சம்பந்தப்பட்ட பிரபல விமான நிறுவனத்தை விமர்சித்துள்ளார். இதையடுத்து அந்த விமான நிறுவனம் ராணாவிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியதுடன் விரைவில் மிஸ் ஆன அவரது லக்கேஜையும் கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்துள்ளது.